Thursday, February 11, 2010

கணவன் மனைவி

மனைவி: நான் ஒரு நியூஸ் பேப்பரா இருந்தா நல்லா இருந்திருக்கும், நாளெல்லாம் உங்க கைல இருந்திருப்பேன்.
கணவன்: ம்ம்...நல்லாத்தான் இருந்திருக்கும், எனக்கும் டெய்லி புதுசு புதுசா பொண்டாட்டி கிடைச்சியிருக்கும்.

--------------
டாக்டர் : உங்க கணவருக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை, இந்தாங்க தூக்க மாத்திரை.
மனைவி: அவருக்கு எப்ப தரனும்.
டாக்டர்: தூக்க மாத்திரை அவருக்கு இல்லை, உங்களுக்கு.

---------------
கணவன்: இன்னைக்கு சன்டே, நான் என்ஜாய் பண்ணனும் சினிமாக்கு மூணு டிக்கட் எடுத்திருக்கேன்.
மனைவி: நாம ரெண்டு பேர் தானே எதுக்கு மூணு டிக்கட்.
கணவன்: இது உனக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும்.

-------------
புதுசா கல்யாணமானவன் : பொண்டாட்டியோட பர்த்டேவை எப்படி ஞாபகம் வச்சிக்கிறது.
அனுபவஸ்த்தன் : ஒரு தடவை மறந்து பாரு, அப்புறம் ஜன்மத்துக்கும் மறக்க மாட்டே .

Wednesday, February 10, 2010

லேட்டாயிடுச்சி

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு அசெம்ப்ளி ஷாப்ல 25 பேர் கொண்ட ஒரு குருப்க்கு நான் இன்சார்ஜா இருந்தேன். சாதரணமா லேட்டா வர்றவங்க கிட்டே "ஏங்க லேட்ன்னு" கேட்டா "பஸ் லேட்" இல்ல "உடம்பு சரியில்ல" இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்வாங்க. ஆனா, ஒரு குடும்பஸ்த்தர் மட்டும் "ஏங்க லேட்ன்னு" கேட்டா "கொஞ்சம் லேட்டாயிடுச்சி சார்" ன்னு சொல்வாரு. "என்னங்க, ஏன் லேட்டுன்னு கேட்டா, கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு சொல்றிஙகளே, ஏங்க லேட்" ன்னு மறுபடியும் கேட்டா”அதான் சொல்றேன்ல்ல சார் கொஞ்சம் லேட்டயிடுச்சி” அப்படின்னு சொல்வாரு. கடைசி வரைக்கும் லேட்டா வந்ததுக்கான காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டாரு.

எனக்கு அதோட அர்த்தம் கல்யாணம் ஆன பிறகு தான் புரிய ஆரம்பிச்சது. நானும் இப்பல்லாம் லேட்டா ஆபிஸ் போகும் போது ஏன் லேட்னு பாஸ் கேட்டா இந்த உண்மையான காரணத்தை சொல்ல முடியுமான்னு யோசிக்கிறேன்.

1. 6.30 மணிக்கு அலாரம் அடிக்கும் போது அலாரத்தை ஆப் செய்துட்டு இன்னும் அரை மணி நேரம் துங்குறேனே (இந்த அரை மணி நேரந்தாங்க சொர்க்கம்) அத சொல்ல முடியுமா?

2. எழுந்தப்பறம் 5 நிமிஷம் ஒரு மப்புல உட்கார்ந்து இருக்கிறேனே (இந்த சுகத்தை அனுபவிச்சாத்தான் புரியும்) அத சொல்ல முடியுமா?

3. பொண்டாட்டி கிட்ட காபி கேட்டா, ”இந்த காய கொஞ்சம் நறுக்கி கொடுங்க அதுக்குள்ள காபி கலந்து தரேன்”னு சொல்லி காய் கட் செய்து முடியிற வரைக்கும் காபிய கண்ல காட்டாம லேட் செய்றாளே (யப்பா, இதயெல்லாம் எந்த காலேஜ்ல சொல்லி தராங்கன்னு தெரியல) அத சொல்ல முடியுமா?

4. குளிச்சிட்டு வந்து ட்ரஸ் செய்ய பிரோவை திறந்தா பேண்ட்டுங்க மட்டும் அயர்ன் செய்துயிருக்க ஒரு அயர்ன் செய்த சட்டை கூட இல்லாம அந்த நேரத்துக்கு சட்டை அயர்ன் செஞ்சதை சொல்ல முடியுமா?

5. ட்ரஸ் செஞ்சிட்டு சாக்ஸை தேடினா ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு சாக்ஸ் மட்டும் இருக்க இன்னொரு சாக்ஸை தேட்றதை சொல்ல முடியுமா?

6. சாக்ஸை போட்டுட்டு ஷுவை போடலாம்ன்னு பார்த்தா, ஷுவை என் குட்டி பையன் போட்டுட்டு ஹால் பூரா சுத்திட்டு இருக்க அவன்கிட்ட தாஜா செய்து ஷுவை வாங்கி போட்ற்துக்கு கொஞசம் நேரம் ஆகுமே அத சொல்ல முடியுமா?

7. மொத நாள் சாயங்காலம் பெட்ரோல் போட மறந்து காலைல பெட்ரோல் போட க்யுவுல நின்னேனே அத சொல்ல முடியுமா?

ம்ம்... இப்பதான் புரியுது இப்படி ஒவ்வொரு செயல்லயும் கொஞ்சம் லேட்டாகவே தான் அவர் பொதுவா கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு உண்மைய சொன்னார்னு.

Tuesday, February 9, 2010

ஆண் மனம்

மீனின் கண்ணீர்
நீருக்குத்தெரியும்
ஆணின் கண்ணீர்
யாருக்குத்தெரியும்

அழுவதற்கும் வழியில்லா
அவல நிலை
இந்த ஆண்களுக்கு

தேக்கி வைத்த சோகம்
நெஞ்சில் சுமையாகும் பொழுது
அவன் அழுவதற்கு
ஆறுதலாய் அமைந்த இடம்
குளியலறை
குளியலறையில்
வழிந்தோடும் நீரில்
கரைந்தோடும் அவன் கண்ணீர்
ஆம்....
பாடல்கள் மட்டுமல்ல
சில நேரம்
ஆண்களின் அழுகையும்
குளியலறையில் அரங்கேறுகிறது.

Friday, February 5, 2010

அங்க எப்படி?

சாப்பிடும் போது எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்பிடனும் என்பது என்னோட விருப்பம். ஆனா எங்க வீட்ல அப்படி நடக்க மாட்டேங்குதுங்க. டைனிங் டேபில்ல சாப்பாடு பரிமாறினதும் எல்லோரும் அவங்க அவங்க தட்ட எடுத்துக்கிட்டு போய் டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு டிவி பார்த்துகிட்டே சாப்பிடறாங்க. கோபம் வந்து என்னைக்காவது சத்தம் போட்டா அடுத்த ரெண்டு நாளைக்கு எல்லாம் சரியாய் இருக்குது மூணாவது நாள் மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறின மாதிரி தட்ட தூக்கிட்டு டிவி முன்னாடி போய் உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துகிட்டே சாபிடறாங்க . எங்க வீட்ல மட்டும் தான் இப்படி நடக்குதா? இல்ல எல்லோர் வீட்லயும் இப்படி தானா ? இதை எப்படி சரி செய்வது? கொஞ்சம் சொல்லுங்களேன்.

Wednesday, January 20, 2010

ஆயிரத்தில் ஒருவன்



ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சராசரி ரசிகர்களுக்கு புரியாது என்றும் சில அறிவு ஜீவிகளுக்கு மட்டும் தான் புரியும் என்றும் சிலர் தங்களை தாங்களே மேதாவி ஆக்கி கொள்கிறார்கள். மேலும் குமுதம் விமர்சனத்திலும் "ஆயிரத்தில் ஒருவன் சராசரி ரசிகர்களுக்கு புரியாத புதிர்" என்று எழுதியிருக்கிறார்கள். ஒரு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் நன்றாக இருக்கிறது அல்லது நன்றாக இல்லை, சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது என்றால் சரி ஆனால் அது என்ன சராசரி ரசிகர்களுக்கு புரியாது? திரைக்கதை தெளிவில்லாமல் சில இடங்களில் திரைப்படம் பார்ப்பவர்கள் கதையை யூகிக்கும் வண்ணம் திரைப்படம் அமைந்து இருக்கிறது என்பதே உண்மை. ஒரு இயக்குனர் தான் சொல்ல நினைதததை அனைவர்க்கும் புரியும் வண்ணம் சொல்வது அவரது திறமை, அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் அமையவில்லை.



Tuesday, January 19, 2010

ராணுவ வீரனின் கவலை



சீறிவரும் எதிரியின்
தோட்டாக்களை கண்டு
சிறிதும் பதறியதில்லை
எடுத்து வைக்கும்
அடுத்த அடியின் கீழ்
கண்ணிவெடி இருக்குமோ
என்றும் பதறியதில்லை
ஆனால்....
மருத்துவமனை சென்ற
வயதான என் தாய்
மருந்து வாங்கும் இடம் தேடி
அலைவாளே என்றும்
அண்டை நாட்டு எதிரியை
துச்சமென நினைக்கும்
வீரனின் தங்கை
கல்லூரி செல்லும் வழியில்
கயவர் சீண்ட
நடுங்குவாளே என்றும்
நினைக்கையில் நெஞ்சம்
பதறுகிறது.

Sunday, January 17, 2010

Wife



  • My wife and I were happy for twenty years. Then we met (Rodney Dangerfield)


  • A good wife always forgives her husband when she is wrong. (Milton Berle)


  • By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher (Socrates)


  • The great question... which I have not been able to answer... is, "What does a woman want?" (Sigmund Freud)


  • Two secrets to keep your marriage brimming are whenever you're wrong, admit it and whenever you're right, shut up ( Nash )