மீனின் கண்ணீர்
நீருக்குத்தெரியும்
ஆணின் கண்ணீர்
யாருக்குத்தெரியும்
அழுவதற்கும் வழியில்லா
அவல நிலை
இந்த ஆண்களுக்கு
தேக்கி வைத்த சோகம்
நெஞ்சில் சுமையாகும் பொழுது
அவன் அழுவதற்கு
ஆறுதலாய் அமைந்த இடம்
குளியலறை
குளியலறையில்
வழிந்தோடும் நீரில்
கரைந்தோடும் அவன் கண்ணீர்
ஆம்....
பாடல்கள் மட்டுமல்ல
சில நேரம்
ஆண்களின் அழுகையும்
குளியலறையில் அரங்கேறுகிறது.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Tuesday, February 9, 2010
Tuesday, January 19, 2010
ராணுவ வீரனின் கவலை

சீறிவரும் எதிரியின்
தோட்டாக்களை கண்டு
சிறிதும் பதறியதில்லை
எடுத்து வைக்கும்
அடுத்த அடியின் கீழ்
கண்ணிவெடி இருக்குமோ
என்றும் பதறியதில்லை
ஆனால்....
மருத்துவமனை சென்ற
வயதான என் தாய்
மருந்து வாங்கும் இடம் தேடி
அலைவாளே என்றும்
அண்டை நாட்டு எதிரியை
துச்சமென நினைக்கும்
வீரனின் தங்கை
கல்லூரி செல்லும் வழியில்
கயவர் சீண்ட
நடுங்குவாளே என்றும்
நினைக்கையில் நெஞ்சம்
பதறுகிறது.
லேபிள்கள்:
கவிதை
Friday, January 15, 2010
முதியோர் இல்லம்

வயதான பெற்றோரை
முதியோர் இல்லம் சேர்க்க
வழியில் ஒருவரிடம்
விலாசம் விசாரித்தேன்
வலது புறம் திரும்பியதும்
பழைய பேப்பர் கடை வரும்
அதற்கு அருகில் என்றார்...
திரும்பி வந்து விட்டேன் .
லேபிள்கள்:
கவிதை
Subscribe to:
Posts (Atom)

