Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, February 9, 2010

ஆண் மனம்

மீனின் கண்ணீர்
நீருக்குத்தெரியும்
ஆணின் கண்ணீர்
யாருக்குத்தெரியும்

அழுவதற்கும் வழியில்லா
அவல நிலை
இந்த ஆண்களுக்கு

தேக்கி வைத்த சோகம்
நெஞ்சில் சுமையாகும் பொழுது
அவன் அழுவதற்கு
ஆறுதலாய் அமைந்த இடம்
குளியலறை
குளியலறையில்
வழிந்தோடும் நீரில்
கரைந்தோடும் அவன் கண்ணீர்
ஆம்....
பாடல்கள் மட்டுமல்ல
சில நேரம்
ஆண்களின் அழுகையும்
குளியலறையில் அரங்கேறுகிறது.

Tuesday, January 19, 2010

ராணுவ வீரனின் கவலை



சீறிவரும் எதிரியின்
தோட்டாக்களை கண்டு
சிறிதும் பதறியதில்லை
எடுத்து வைக்கும்
அடுத்த அடியின் கீழ்
கண்ணிவெடி இருக்குமோ
என்றும் பதறியதில்லை
ஆனால்....
மருத்துவமனை சென்ற
வயதான என் தாய்
மருந்து வாங்கும் இடம் தேடி
அலைவாளே என்றும்
அண்டை நாட்டு எதிரியை
துச்சமென நினைக்கும்
வீரனின் தங்கை
கல்லூரி செல்லும் வழியில்
கயவர் சீண்ட
நடுங்குவாளே என்றும்
நினைக்கையில் நெஞ்சம்
பதறுகிறது.

Friday, January 15, 2010

முதியோர் இல்லம்



வயதான பெற்றோரை

முதியோர் இல்லம் சேர்க்க

வழியில் ஒருவரிடம்

விலாசம் விசாரித்தேன்

வலது புறம் திரும்பியதும்

பழைய பேப்பர் கடை வரும்

அதற்கு அருகில் என்றார்...

திரும்பி வந்து விட்டேன் .


நம்பிக்கை ஒலி



பார்வையற்ற பிச்சைக்காரர்

தட்டில்

சில்லறை சத்தம்.


நாய்ப்பாசம்



குப்பைத்தொட்டியில் குழந்தை

ஆச்சரியத்தோடு பார்த்தது

நாய், தன் குட்டியுடன்.