இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்ல் இருந்து 1800 கோடி ரூபா லஞ்ச பணமும் 1500 கிலோ தங்கமும் சிபிஐ அதிகாரிங்க பறிமுதல் செஞ்சிருக்காங்க. மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க permission கொடுக்கிறதுக்கு லஞ்சம் வாங்கியிருக்கான். நம்ம வாழ்நாள்ல ஒரு கோடி ரூபாய கண்ணால பாக்க முடியுமான்னு தெரியல. 1800 கோடி ரூபாய்.... ஒரு கோடிக்கு எத்தனை சைபர் 10000000 சரியா? அப்ப 18000000000 ரூபாய். 1500 கிலோ தங்கம், 1 கிராம் 1500 ரூபாய்ன்னா 1 கிலோ... 1500000 ரூபாய்... 1500 கிலோ 2250000000 ரூபாய். தல சுத்துது. ரொக்கமாவே இவ்வளவு பணத்தையும், தங்கத்தையும் வச்சிருக்கான் லஞ்சத்துல வாங்குன சொத்து எவ்வளவு இருக்கோ...
இது மாதிரி லஞ்சம் கொடுத்து மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சவனுங்க மெரிட்லயா சீட்டு தருவானுங்க? பணத்தை வாங்கிட்டு தகுதி இல்லாதவனுக்கெல்லாம் சீட்டு தருவானுங்க. பணத்த குடுத்து சீட்டு வாங்கிறவனுக்கு எப்படி பாஸ் பண்ணனும்னு தெரியாதா? இது மாதிரி டாக்டரா ஆறவனுங்க என்ன பண்ணுவானுஙக.... படிக்க குடுத்த பணத்த நம்ம கிட்டருந்து புடுங்றதோட நம்ம உயிரையும் சேத்து எடுப்பானுங்க. எப்படியும் இந்த சமுகத்தில நடக்குற எல்லா தப்புலயும் கடசில ஆப்பு நமக்கு தான்.
என்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க...கொஞ்ச நாளா எனக்கு acidity ப்ராப்ளம் இருந்தது. போன மாசம் ஒரு டாக்டர பாத்தேன். என்னோட ப்ராப்ளத்த கேட்ட அந்த டாக்டர் என்ன தொட்டு கூட பாக்கலீங்க... எந்த மருந்தும் எழுதல நாளக்கி காலைல எதுவும் சாப்பிடாம வாங்க endoscope செஞ்சி பாத்துடலாம்னு மட்டும் சொன்னாரு. மொத்தமா அந்த ரூம்ல ஒரு நிமிஷம் கூட இருந்திருக்க மாட்டேன். வெறும endoscope செஞ்சி பாத்துடலாம்னு சொன்னதுக்கு 500 ரூபாய் fees வாங்கிட்டாரு. ஒரு செருப்பு தைக்கிற தொழிலாளி நம்ம செருப்ப தெச்சி குடுத்திட்டு 5 ரூபா கேட்டா தெச்ச செருப்ப நாலு தடவ இழுத்து பாத்துட்டு தான் 5 ரூபா கொடுப்போம்... அந்த 5 ரூபா குடுக்கிறதுக்கே மறுபடியும் அறுந்துடாதே... அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி கேப்போம் ஆனா டாக்டர்ங்க கிட்ட... அவங்க சரியான ட்ரீட்மெண்ட் தந்தாங்களா இல்லாயா... நியாயமான fees கேக்குறாங்களான்னு பாக்காம பணத்த கொடுக்கிறோம்
சரி விஷயத்துக்கு வர்ரேன் இவ்வளவு லஞசம் வாங்கின ஆள என்ன பண்ணலாம்? அந்நியன் படத்துல சொன்ன மாதிரி ஒரு ரூம்ல அவனையும் அந்த 1800 கோடி ரூபாயையும், 1500 கிலோ தங்கத்தையும் வச்சி பூட்டிடனும். அவன் அந்த பணத்தையும், தங்கத்தையும் தின்னுட்டு சாவனும்.
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Sunday, April 25, 2010
Tuesday, March 16, 2010
நித்தியானந்தர் – ஓர் அனுபவம்
நித்தியானந்தரை பற்றிய என்னுடைய முந்திய பதிவை எழுதிய பின் மனதில் ஒரு சிறு நெருடல், சுமை, ம் … ஏதோ ஒன்று. காரணம், நித்தியானந்தரை பின் பற்ற ஆரம்பித்தவர்களில் (நல்ல வேளை இரண்டு மாதமாகத்தான்) நானும் ஒருவன். தற்ச்சமயம் எல்லோரும் அவரை பற்றியே எழுதுவதால், அவரை பற்றி எழுதுவதற்க்கு தயக்கமாக இருந்தது அதையும் மீறி எழுதிவிட்டேன். சரி விஷயத்திற்க்கு வருவோம்.
இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நித்தியானந்தரின் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். தியான வகுப்பை ஏற்ப்பாடு செய்திருந்த விதமும், அங்கு சேவை செய்தவர்கள் மரியாதையாக நடந்து கொண்ட விதமும், தியான வகுப்பும் நன்றாகத்தான் இருந்தது. அப்போதே பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கும் கல்பதருவிற்க்கான (கல்பதரு என்றால் வேண்டும் வரங்களை அளிப்பது) விளம்பரமும் செய்தார்கள்.
என் அம்மா கேன்சர் நோயால் கஷ்ட்டப்படுவதால் நோயின் வீரியமாவது அவரது ஹீலிங் மூலமாக குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பில், நானும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்பதருக்கு போனோம். பெண்கள் சந்தன கலர் உடையில் தரிசனதிற்கு வந்தால் நல்லது என்று சொன்னதால் (அப்போது தான் சக்தியை ரிசீவ் பண்ண முடியுமாம்). மனைவிக்கு சந்தன கலர் சுடிதாருக்காக முந்தின நாள் இரவு 10 கடைகளுக்கு மேல் தேடி ஒரு சந்தன கலர் சுடிதாரும் எடுத்து வந்தேன். 7 மணிக்குள் அங்கு இருக்க வேண்டும் என்பதால் 5 மணிக்கெல்லாம் தூங்கி கொண்டிருந்த குழந்தையெல்லாம் பாதி தூக்கதில் எழுப்பி ஒரு வித பதட்டத்துடனே கிளம்பி சென்றோம்.
கல்பதரு நிகழ்ச்சியிலும் நித்யானந்தர் மேடைக்கு வரும் வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. என்னவோ தெரியவில்லை அவர் மேடைக்கு வந்த பிறகு அவரை பற்றி அவரது சீடர்கள் பில்ட அப் செய்து வைத்திருந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
1. முதலில் அவர் மேடையில் தோன்றும் போது பின்னனியில் ஒலித்த பாட்டு அதிரவைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஒலித்த அத்தனை பாடல்களும் அவரைப்பற்றியே இருந்தது மேலும் அத்தனையும் குத்து பாடல் வடிவில் இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் மனதை வருடும் சாந்தமான இசையை எதிர்ப்பார்த்தேன் ஏனென்றால் அங்கு வந்திருந்தவர்களில் நிறைய நோயாளிகள் இருந்தார்கள்.
2. அவர் பேசும் போது சில கதைகளை கூறினார் அவை ஏற்கனவே பல புத்தகங்களில் வந்த காமெடி கதைகள் ஆனால் அதை அவர் நேரில் பார்த்தது போல் கூறியதில் சிறிது பொய் கலந்திருந்தது (பட்டி மன்றங்களில் தான் அப்படி பேசுவார்கள்).
3. கல்பதரு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் அந்த நிகழ்ச்சியின் போது யாரும் பேசக்கூடாது என்றும் எந்த சப்தமும் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் கல்பதரு நடந்து கொண்டிருக்கும் போது ஆண்களும் பெண்களும் (தனித்தனியாகத்தான்) ஆடிய ஆட்டமும் அதற்காக போடப்பட்ட குத்து பாடல்களும் காதை கிழித்தது (ஆட்டமும்,பாட்டும் நன்றாக இல்லை).
4. ஆசி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகம் பணம் கொடுத்தவர்களுடன் நிறைய நேரம் பேசினார். எங்களை போன்ற குறைவான பணம் (1000 ரூபாய்) கொடுத்தவர்கள் கூறியதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை அதற்குள் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சீடர்கள் திருப்பதியில் தள்ளி விடுவார்களே அது போல் தள்ளி விட்டு விட்டார்கள்.
5. எல்லாவற்றிற்க்கும் மேல் அவரின் சீடர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கட்டியணைத்து அவர் ஆசி வழங்கிய விதம் சரியில்லை. என்னதான் சாமியாராக இருந்தாலும் பெண்களை கட்டியணைத்து ஆசி வழங்குவது தேவையில்லாதது என்று திரும்பி வரும் போதே நாங்கள் பேசி கொண்டு வந்தோம். இப்போது யோசித்து பார்த்தால் இப்படிப்பட்டவர் எந்த வித விகல்ப்பமும் இல்லாமல் பெண்களை கட்டிப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நித்தியானந்தரின் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். தியான வகுப்பை ஏற்ப்பாடு செய்திருந்த விதமும், அங்கு சேவை செய்தவர்கள் மரியாதையாக நடந்து கொண்ட விதமும், தியான வகுப்பும் நன்றாகத்தான் இருந்தது. அப்போதே பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கும் கல்பதருவிற்க்கான (கல்பதரு என்றால் வேண்டும் வரங்களை அளிப்பது) விளம்பரமும் செய்தார்கள்.
என் அம்மா கேன்சர் நோயால் கஷ்ட்டப்படுவதால் நோயின் வீரியமாவது அவரது ஹீலிங் மூலமாக குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பில், நானும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்பதருக்கு போனோம். பெண்கள் சந்தன கலர் உடையில் தரிசனதிற்கு வந்தால் நல்லது என்று சொன்னதால் (அப்போது தான் சக்தியை ரிசீவ் பண்ண முடியுமாம்). மனைவிக்கு சந்தன கலர் சுடிதாருக்காக முந்தின நாள் இரவு 10 கடைகளுக்கு மேல் தேடி ஒரு சந்தன கலர் சுடிதாரும் எடுத்து வந்தேன். 7 மணிக்குள் அங்கு இருக்க வேண்டும் என்பதால் 5 மணிக்கெல்லாம் தூங்கி கொண்டிருந்த குழந்தையெல்லாம் பாதி தூக்கதில் எழுப்பி ஒரு வித பதட்டத்துடனே கிளம்பி சென்றோம்.
கல்பதரு நிகழ்ச்சியிலும் நித்யானந்தர் மேடைக்கு வரும் வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. என்னவோ தெரியவில்லை அவர் மேடைக்கு வந்த பிறகு அவரை பற்றி அவரது சீடர்கள் பில்ட அப் செய்து வைத்திருந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
1. முதலில் அவர் மேடையில் தோன்றும் போது பின்னனியில் ஒலித்த பாட்டு அதிரவைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஒலித்த அத்தனை பாடல்களும் அவரைப்பற்றியே இருந்தது மேலும் அத்தனையும் குத்து பாடல் வடிவில் இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் மனதை வருடும் சாந்தமான இசையை எதிர்ப்பார்த்தேன் ஏனென்றால் அங்கு வந்திருந்தவர்களில் நிறைய நோயாளிகள் இருந்தார்கள்.
2. அவர் பேசும் போது சில கதைகளை கூறினார் அவை ஏற்கனவே பல புத்தகங்களில் வந்த காமெடி கதைகள் ஆனால் அதை அவர் நேரில் பார்த்தது போல் கூறியதில் சிறிது பொய் கலந்திருந்தது (பட்டி மன்றங்களில் தான் அப்படி பேசுவார்கள்).
3. கல்பதரு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் அந்த நிகழ்ச்சியின் போது யாரும் பேசக்கூடாது என்றும் எந்த சப்தமும் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் கல்பதரு நடந்து கொண்டிருக்கும் போது ஆண்களும் பெண்களும் (தனித்தனியாகத்தான்) ஆடிய ஆட்டமும் அதற்காக போடப்பட்ட குத்து பாடல்களும் காதை கிழித்தது (ஆட்டமும்,பாட்டும் நன்றாக இல்லை).
4. ஆசி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகம் பணம் கொடுத்தவர்களுடன் நிறைய நேரம் பேசினார். எங்களை போன்ற குறைவான பணம் (1000 ரூபாய்) கொடுத்தவர்கள் கூறியதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை அதற்குள் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சீடர்கள் திருப்பதியில் தள்ளி விடுவார்களே அது போல் தள்ளி விட்டு விட்டார்கள்.
5. எல்லாவற்றிற்க்கும் மேல் அவரின் சீடர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கட்டியணைத்து அவர் ஆசி வழங்கிய விதம் சரியில்லை. என்னதான் சாமியாராக இருந்தாலும் பெண்களை கட்டியணைத்து ஆசி வழங்குவது தேவையில்லாதது என்று திரும்பி வரும் போதே நாங்கள் பேசி கொண்டு வந்தோம். இப்போது யோசித்து பார்த்தால் இப்படிப்பட்டவர் எந்த வித விகல்ப்பமும் இல்லாமல் பெண்களை கட்டிப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
லேபிள்கள்:
அனுபவம்
Wednesday, February 10, 2010
லேட்டாயிடுச்சி
பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு அசெம்ப்ளி ஷாப்ல 25 பேர் கொண்ட ஒரு குருப்க்கு நான் இன்சார்ஜா இருந்தேன். சாதரணமா லேட்டா வர்றவங்க கிட்டே "ஏங்க லேட்ன்னு" கேட்டா "பஸ் லேட்" இல்ல "உடம்பு சரியில்ல" இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்வாங்க. ஆனா, ஒரு குடும்பஸ்த்தர் மட்டும் "ஏங்க லேட்ன்னு" கேட்டா "கொஞ்சம் லேட்டாயிடுச்சி சார்" ன்னு சொல்வாரு. "என்னங்க, ஏன் லேட்டுன்னு கேட்டா, கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு சொல்றிஙகளே, ஏங்க லேட்" ன்னு மறுபடியும் கேட்டா”அதான் சொல்றேன்ல்ல சார் கொஞ்சம் லேட்டயிடுச்சி” அப்படின்னு சொல்வாரு. கடைசி வரைக்கும் லேட்டா வந்ததுக்கான காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டாரு.
எனக்கு அதோட அர்த்தம் கல்யாணம் ஆன பிறகு தான் புரிய ஆரம்பிச்சது. நானும் இப்பல்லாம் லேட்டா ஆபிஸ் போகும் போது ஏன் லேட்னு பாஸ் கேட்டா இந்த உண்மையான காரணத்தை சொல்ல முடியுமான்னு யோசிக்கிறேன்.
1. 6.30 மணிக்கு அலாரம் அடிக்கும் போது அலாரத்தை ஆப் செய்துட்டு இன்னும் அரை மணி நேரம் துங்குறேனே (இந்த அரை மணி நேரந்தாங்க சொர்க்கம்) அத சொல்ல முடியுமா?
2. எழுந்தப்பறம் 5 நிமிஷம் ஒரு மப்புல உட்கார்ந்து இருக்கிறேனே (இந்த சுகத்தை அனுபவிச்சாத்தான் புரியும்) அத சொல்ல முடியுமா?
3. பொண்டாட்டி கிட்ட காபி கேட்டா, ”இந்த காய கொஞ்சம் நறுக்கி கொடுங்க அதுக்குள்ள காபி கலந்து தரேன்”னு சொல்லி காய் கட் செய்து முடியிற வரைக்கும் காபிய கண்ல காட்டாம லேட் செய்றாளே (யப்பா, இதயெல்லாம் எந்த காலேஜ்ல சொல்லி தராங்கன்னு தெரியல) அத சொல்ல முடியுமா?
4. குளிச்சிட்டு வந்து ட்ரஸ் செய்ய பிரோவை திறந்தா பேண்ட்டுங்க மட்டும் அயர்ன் செய்துயிருக்க ஒரு அயர்ன் செய்த சட்டை கூட இல்லாம அந்த நேரத்துக்கு சட்டை அயர்ன் செஞ்சதை சொல்ல முடியுமா?
5. ட்ரஸ் செஞ்சிட்டு சாக்ஸை தேடினா ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு சாக்ஸ் மட்டும் இருக்க இன்னொரு சாக்ஸை தேட்றதை சொல்ல முடியுமா?
6. சாக்ஸை போட்டுட்டு ஷுவை போடலாம்ன்னு பார்த்தா, ஷுவை என் குட்டி பையன் போட்டுட்டு ஹால் பூரா சுத்திட்டு இருக்க அவன்கிட்ட தாஜா செய்து ஷுவை வாங்கி போட்ற்துக்கு கொஞசம் நேரம் ஆகுமே அத சொல்ல முடியுமா?
7. மொத நாள் சாயங்காலம் பெட்ரோல் போட மறந்து காலைல பெட்ரோல் போட க்யுவுல நின்னேனே அத சொல்ல முடியுமா?
ம்ம்... இப்பதான் புரியுது இப்படி ஒவ்வொரு செயல்லயும் கொஞ்சம் லேட்டாகவே தான் அவர் பொதுவா கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு உண்மைய சொன்னார்னு.
எனக்கு அதோட அர்த்தம் கல்யாணம் ஆன பிறகு தான் புரிய ஆரம்பிச்சது. நானும் இப்பல்லாம் லேட்டா ஆபிஸ் போகும் போது ஏன் லேட்னு பாஸ் கேட்டா இந்த உண்மையான காரணத்தை சொல்ல முடியுமான்னு யோசிக்கிறேன்.
1. 6.30 மணிக்கு அலாரம் அடிக்கும் போது அலாரத்தை ஆப் செய்துட்டு இன்னும் அரை மணி நேரம் துங்குறேனே (இந்த அரை மணி நேரந்தாங்க சொர்க்கம்) அத சொல்ல முடியுமா?
2. எழுந்தப்பறம் 5 நிமிஷம் ஒரு மப்புல உட்கார்ந்து இருக்கிறேனே (இந்த சுகத்தை அனுபவிச்சாத்தான் புரியும்) அத சொல்ல முடியுமா?
3. பொண்டாட்டி கிட்ட காபி கேட்டா, ”இந்த காய கொஞ்சம் நறுக்கி கொடுங்க அதுக்குள்ள காபி கலந்து தரேன்”னு சொல்லி காய் கட் செய்து முடியிற வரைக்கும் காபிய கண்ல காட்டாம லேட் செய்றாளே (யப்பா, இதயெல்லாம் எந்த காலேஜ்ல சொல்லி தராங்கன்னு தெரியல) அத சொல்ல முடியுமா?
4. குளிச்சிட்டு வந்து ட்ரஸ் செய்ய பிரோவை திறந்தா பேண்ட்டுங்க மட்டும் அயர்ன் செய்துயிருக்க ஒரு அயர்ன் செய்த சட்டை கூட இல்லாம அந்த நேரத்துக்கு சட்டை அயர்ன் செஞ்சதை சொல்ல முடியுமா?
5. ட்ரஸ் செஞ்சிட்டு சாக்ஸை தேடினா ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு சாக்ஸ் மட்டும் இருக்க இன்னொரு சாக்ஸை தேட்றதை சொல்ல முடியுமா?
6. சாக்ஸை போட்டுட்டு ஷுவை போடலாம்ன்னு பார்த்தா, ஷுவை என் குட்டி பையன் போட்டுட்டு ஹால் பூரா சுத்திட்டு இருக்க அவன்கிட்ட தாஜா செய்து ஷுவை வாங்கி போட்ற்துக்கு கொஞசம் நேரம் ஆகுமே அத சொல்ல முடியுமா?
7. மொத நாள் சாயங்காலம் பெட்ரோல் போட மறந்து காலைல பெட்ரோல் போட க்யுவுல நின்னேனே அத சொல்ல முடியுமா?
ம்ம்... இப்பதான் புரியுது இப்படி ஒவ்வொரு செயல்லயும் கொஞ்சம் லேட்டாகவே தான் அவர் பொதுவா கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு உண்மைய சொன்னார்னு.
லேபிள்கள்:
அனுபவம்
Subscribe to:
Posts (Atom)