Showing posts with label காமெடி பீஸ். Show all posts
Showing posts with label காமெடி பீஸ். Show all posts

Thursday, April 1, 2010

நாய் ஒன்னுக்கு போகும்போது...



நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட்மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒருசந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்துவச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?

நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும்அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும்போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம்அவசர வேலை இருக்கு அப்புறம்
பாக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.

இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானேமோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன்.
அது என்னன்னா...

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேலவிழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப்போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...

(ஹலோ இதுக்கெல்லாம அடிக்க வருவாங்க புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க இல்லைன்னா இதுக்கு மேல கடி வரும் உஷாரா இருங்க)

Monday, March 8, 2010

பொறுப்புள்ள அப்பா



“டேய்....வாயில விரல வச்சி சூப்பாதன்னு எத்தனை தடவை சொல்றது....வாயில இருந்து விரல எடுடா


“ஏங்க கோவப்படறீங்க...இப்பதானே மூனு வயுசு ஆகுது போகப்போக சரியாயிடும்


“அடியே....விரல் சூப்பினான்னா பல்லு எடுத்தாப்போல வளரும் அப்புறம் வரப்போற மருமகளுக்கு நான் தானே பதில் சொல்லனும்


“என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலியே


“இவனுக்கு கல்யாணம் ஆச்சின்னா வரப்போற என் மருமக என்னை பாத்து கேட்கமாட்டாளா?


“என்ன கேட்பா


“ஏன் மாமா...இவருக்குத்தான் சின்ன வயசுலே விரல் சூப்புற பழக்கம் இருந்ததே நீங்க அந்த பழக்கத்தை நிறுத்தியிருக்க கூடாதா...அதால எனக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க....முத்தா கொடுத்தா பல்லு குத்துது அப்படின்னு சொன்னா நான் என்ன பதில் சொல்றது


“சீப்போங்க...உங்களுக்கு கொஞசம் கூட விவஸ்த்தை கிடையாது






Friday, March 5, 2010

சந்நியாசம்

நிறைய பேர் இப்படித்தான் பொலம்புறாங்க

"மனசே சரியில்லைங்க.... நாடு போற போக்கை பார்த்தா பேசாமே இல்லறத்தை விட்டுட்டு சந்நியாசம் போயிடலாம்னு தோனுது".

Thursday, February 11, 2010

கணவன் மனைவி

மனைவி: நான் ஒரு நியூஸ் பேப்பரா இருந்தா நல்லா இருந்திருக்கும், நாளெல்லாம் உங்க கைல இருந்திருப்பேன்.
கணவன்: ம்ம்...நல்லாத்தான் இருந்திருக்கும், எனக்கும் டெய்லி புதுசு புதுசா பொண்டாட்டி கிடைச்சியிருக்கும்.

--------------
டாக்டர் : உங்க கணவருக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை, இந்தாங்க தூக்க மாத்திரை.
மனைவி: அவருக்கு எப்ப தரனும்.
டாக்டர்: தூக்க மாத்திரை அவருக்கு இல்லை, உங்களுக்கு.

---------------
கணவன்: இன்னைக்கு சன்டே, நான் என்ஜாய் பண்ணனும் சினிமாக்கு மூணு டிக்கட் எடுத்திருக்கேன்.
மனைவி: நாம ரெண்டு பேர் தானே எதுக்கு மூணு டிக்கட்.
கணவன்: இது உனக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும்.

-------------
புதுசா கல்யாணமானவன் : பொண்டாட்டியோட பர்த்டேவை எப்படி ஞாபகம் வச்சிக்கிறது.
அனுபவஸ்த்தன் : ஒரு தடவை மறந்து பாரு, அப்புறம் ஜன்மத்துக்கும் மறக்க மாட்டே .