Tuesday, February 9, 2010

ஆண் மனம்

மீனின் கண்ணீர்
நீருக்குத்தெரியும்
ஆணின் கண்ணீர்
யாருக்குத்தெரியும்

அழுவதற்கும் வழியில்லா
அவல நிலை
இந்த ஆண்களுக்கு

தேக்கி வைத்த சோகம்
நெஞ்சில் சுமையாகும் பொழுது
அவன் அழுவதற்கு
ஆறுதலாய் அமைந்த இடம்
குளியலறை
குளியலறையில்
வழிந்தோடும் நீரில்
கரைந்தோடும் அவன் கண்ணீர்
ஆம்....
பாடல்கள் மட்டுமல்ல
சில நேரம்
ஆண்களின் அழுகையும்
குளியலறையில் அரங்கேறுகிறது.

4 comments:

  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.அண்ணாமலையான்.

    ReplyDelete
  2. ஆண் அழக்கூடாது என்றும் அவன் அழுவது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது யார் சொன்னது.
    சோகம் துக்கம் பகிர்ந்து கொள்ளத்தானே துணை...

    ReplyDelete
  3. @goma /சோகம் துக்கம் பகிர்ந்து கொள்ளத்தானே துணை... // உண்மைதான் கண்கலங்குவது வேறு உடைந்து அழுவது வேறு... இது இரண்டாவது

    ReplyDelete

Leave your comments